தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கழுகுமலையில் பலத்த மழை

கழுகுமலையில் பலத்த மழை

Updated On :5 மே 2024, 6:40 pm

கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த கழுகுமலை பகுதி மக்கள், இந்த மழையினால் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.