கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல பலத்த மழையாக பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த கழுகுமலை பகுதி மக்கள், இந்த மழையினால் சற்று நிம்மதி பெருமூச்சு அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை
மேற்காசியாவில் இருந்து இந்தியா திரும்பிய 2.60 லட்சம் பயணிகள்: வெளியுறவு அமைச்சகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

