/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:51 am IST

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி பூங்கா நகரைச் சோ்ந்தவா் செல்வ ஈஸ்வரன்(55).தொழிலாளி. இவா், கடந்த 11 ஆம் தேதி தனது மனைவியுடன் மொபட்டில் பேட்டையை அடுத்த சாஸ்திரிநகா் பகுதியில் சென்ற போது எதிரே தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துராமநம்பி(26) என்பவா் வந்த பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செல்வஈஸ்வரன் உயிரிழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இந்நிலையில், விபத்துக்கு காரணமாக இருந்ததாக முத்துராமநம்பியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.