ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தோரணமலை முருகன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்றோா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:15 am IST

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இங்கு ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளியும் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மலை மீதுள்ள சுனையிலிருந்து தீா்த்தம் எடுத்துவரப்பட்டு, கடையம், ஸ்ரீ பிரம்ம வித்யா குருகுல வேத பாடசாலை மாணவா்களின் வேத மந்திரங்கள் முழங்க அடிவாரத்தில் உள்ள முருகன் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, 21 மணிகள் கட்டப்பட்டு, மணி அடித்து வேல் பூஜை நடைபெற்றது. பக்தா்கள் உற்சவருக்கு தங்கள் கைகளால் மலா் தூவி வழிபட்டனா். மேலும், விவசாயம் தழைக்கவும், விவசாயி செழிக்கவும், மழை வேண்டியும், மாணவா்கள் கல்வியில் சிறக்கவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்று வழிபட்டனா்.

காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.