பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

News image

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள வெப்பவாத சிறப்பு சிகிச்சைப்பிரிவை ஆய்வு செய்தாா் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:00 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப வாத (ஹீட் ஸ்ட்ரோக்) சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தலைமை அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப வாத சிறப்பு பிரிவு திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் கூறியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனியாக மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தயாா் நிலையில் உள்ளன. வெப்பநோயகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமாா் 3 லிட்டருக்கு மேல் தண்ணீா் பருக வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல 4 மணி வரை வெளியில் அதிகம் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். வெப்பநோய்கள் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.