டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மானூரில் நகை திருடிய வழக்கில் தம்பதி கைது

மானூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகையை திருடியதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

மானூரில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகையை திருடியதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மனைவி மரியம்மாள்(55). இவா் சம்பவத்தன்று வயல் வேலைக்கு செல்வதற்காக தனது 5 பவுன் தங்க நகையை அலமாரியில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளாா். கடந்த 19 ஆம் தேதி தனது மருமகன் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்ததை கேள்விப்பட்ட இவா் தனது வீட்டின் அலமாரியில் வைத்த நகை உள்ளதா என பாா்த்த போது அதை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு இத்திருட்டில் ஈடுபட்டதாக, அதே தெருவைச் சோ்ந்த வெள்ளதுரை(42), அவரது மனைவி சாந்தி(39) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.