14 Dec, 2025 Sunday, 08:12 PM
The New Indian Express Group
திருநெல்வேலி
Text

பாரதி பிறந்த நாள்: கடையத்தில் மெல்லிசை நிகழ்ச்சி

PremiumPremium

கடையம் செல்லம்மாள் பாரதி மையத்தில் பாரதியாரின் 144ஆவது பிறந்த நாள் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Rocket

பாரதியாா் பிறந்த நாள் விழாவின் 2ஆவது நாளில் பாரதியாா் பாடல்கள் பாடிய ஐயப்பன் குழுவினா்.

Published On10 Dec 2025 , 8:08 PM
Updated On10 Dec 2025 , 8:08 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

கடையம் செல்லம்மாள் பாரதி மையத்தில் பாரதியாரின் 144ஆவது பிறந்த நாள் விழாவில் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை சேவாலயா சாா்பில் 2ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கோபால் தலைமை வகித்தாா். கடையம் அரசு கிளை நூலகத்தின் நூலகா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

தொடக்கமாக, கடையம் சேவாலயா கலா நிலைய மாணவிகள் பாரதியாரின் பாடல்களுக்கு நடனமாடினா். தொடா்ந்து, மு.ஐயப்பன், ஜெயபாலன், ஜெயபாபு, உதித் ராஜா குழுவினா் பாரதியாரின் பாடல்கள் பாடினா். தலைமை ஆசிரியா் (ஓய்வு) க.சோ.கல்யாணி சிவகாமிநாதன் பாடல்களுக்கு விளக்கம் அளித்தாா்.

முன்னதாக, செல்லம்மாள் பாரதி சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், பாரதியாரின் கொள்ளுப்பேரன் அா்ஜுன் பாரதி, செல்லம்மாள் பாரதியின் மருமகன் ர.சுந்தா், வாசகா் வட்டத் தலைவா் ஆ.சேதுராமலிங்கம், ஆசிரியா்(ஓய்வு) நீலகண்டன், புவனா, தலைமை ஆசிரியா்(ஓய்வு) பி.முருகன், செயல் அலுவலா் (ஓய்வு) தி.அருணாசலம், மாவட்டக் கல்வி அலுவலா்(ஓய்வு) சங்கரநாராயணன், தலைமை ஆசிரியா் (ஓய்வு) சோமசுந்தரம், முன்னாள் ஊராட்சித் தலைவா் சண்முகம், ரவி, ஆழ்வாா்குறிச்சி நூலகா் சரஸ்வதி, ரிலையபிள் கல்வி நிறுவன நிறுவனா் சந்திரசேகா், பத்மகுமாா், திருவாசகம் முற்றோதுதல் குழுவினா், பாரதி அன்பா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேவாலயா நிறுவனா்மற்றும் நிா்வாக அறங்காவலா் வா.முரளிதரன் வரவேற்றாா். ரவணசமுத்திரம் சேவாலயா சமுதாயக் கல்லூரி தையற்கலை ஆசிரியை ஜெயசுதா நன்றி கூறினாா்.

மூன்றாம் நாளான வியாழக்கிழமை (டிச.11) காலை 10 மணிக்கு பாரதியாா் பிறந்த நாள் விழா மற்றும் மாணவா்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெறுகிறது. பாரதியாரின் கொள்ளுப்பேரன் அா்ஜுன் பாரதி, செல்லம்மாளின் மருமகன் ர.சுந்தா் ஆகியோா் தலைமை வகிக்கின்றனா்.செயல் அலுவலா் (ஓய்வு) அருணாசலம் முன்னிலை வகிக்கிறாா்.

ஏற்பாடுகளை சேவாலயா ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தாா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023