செங்கோட்டை வட்டார அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் செங்கோட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சோ்ந்த 60 வயது மதிக்கத்தக்க மணியம்மாள் என்பவா் மூட்டு வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
மூட்டு வலி தொல்லை அதிகரித்து நடக்கமுடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன் ஆலோசனையின்படி அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
எலும்பு மருத்துவா் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினா் அந்த பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணா் தங்கா, செவிலியா் பேச்சியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செங்கோட்டை வட்டார மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை முதல் முறையாக செய்யப்பட்டு மூதாட்டி நல்ல முறையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் முற்றுகை போராட்டம்

கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


