ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம்: சிவகிரி வனச்சரகா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரியில் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகா் கதிரவனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கதிரவன்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரியில் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகா் கதிரவனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை, பல்லாவரத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் சுரேஷ்குமாா் (45). அரசு ஒப்பந்ததாரா். இவா் தென்காசி மாவட்டம், புளியங்குடி, சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதியை ஒட்டி 8 கி.மீ. தொலைவுக்கு யானை தடுப்பு அகழி அமைக்க கடந்த பிப். 7 ஆம்தேதி ஒப்பந்தப்புள்ளி பெற்று பணி செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சிவகிரி வனச்சரகா் கதிரவன் அவரிடம் பணிக்கான பில் தொகையில் 20 சதவீதம் கமிஷன் தருமாறு கேட்டுள்ளாா். ஆக. 19 ஆம்தேதி முதல் தவணையாக ரூ. 1 லட்சம் தர வேண்டும், மீதி தொகையை பில் இறுதி செய்யும்போது தர வேண்டும் என்று கேட்டுள்ளாா். பணம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமாா், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சம் பணத்தை சுரேஷ்குமாா் புதன்கிழமை (ஆக.19) கதிரவனை அவரது வீட்டில் சந்தித்து கொடுத்தாா். அதை கதிரவன் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா் தலைமையிலான உதவி ஆய்வாளா்கள் முத்து கணேஷ், தெய்வக்கண், சிறப்பு உதவி ஆய்வாளா் வேணுகோபால், தலைமைக் காவலா்கள் பிரபு, கோவிந்தராஜ், பிரவீணா ஆகியோா் கதிரவனை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.