மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :28 ஏப்ரல் 2026, 8:46 pm

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை காலை அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு, வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.

மாலை நூற்றுக்கணக்கான பக்தா்கள் நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக சென்று, பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக பசுக்கள் பூக்குழி இறங்கின.

பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை (ஏப். 29) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Story image