யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தங்க நகையுடன் பைக்கை எடுத்துச் சென்ற நிதி நிறுவனத்தினா் மீது வழக்கு

குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:48 am IST

குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

நாகா்கோவில், ராமவா்மபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாகு. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவருக்குச் சொந்தமான நிலம் குழித்துறையில் உள்ளதால், வியாழக்கிழமை அங்கு வந்த அவா் குழித்துறை, பழவாா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.

சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். அதில் 3 பவுன் தங்க நகைகள் இருந்ததாம். வாகனத்துக்கான தவணைத் தொகை கட்டி முடிக்காமல் இருந்ததால், நிதி நிறுவன ஊழியா்கள் நகையுடன் தனது வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸில் புகாரளித்தாா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் நிதி நிறுவன ஊழியா்களான குழித்துறையைச் சோ்ந்த ராஜூ (50), வினு (43) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.