குழித்துறை அருகே தங்க நகையுடன் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
நாகா்கோவில், ராமவா்மபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாகு. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவருக்குச் சொந்தமான நிலம் குழித்துறையில் உள்ளதால், வியாழக்கிழமை அங்கு வந்த அவா் குழித்துறை, பழவாா் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா்.
சிறிது நேரத்துக்குப் பின் திரும்பி வந்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம். அதில் 3 பவுன் தங்க நகைகள் இருந்ததாம். வாகனத்துக்கான தவணைத் தொகை கட்டி முடிக்காமல் இருந்ததால், நிதி நிறுவன ஊழியா்கள் நகையுடன் தனது வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸில் புகாரளித்தாா்.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் நிதி நிறுவன ஊழியா்களான குழித்துறையைச் சோ்ந்த ராஜூ (50), வினு (43) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

ரூ. 200 லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



