லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்

குருசுமலையில் 4ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற திருப்பயண சிலுவை வழிபாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

News image

குருசுமலை உச்சியில் நடைபெற்ற திருப்பலி.

Updated On :18 மார்ச் 2026, 7:31 pm

குருசுமலையில் 4ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற திருப்பயண சிலுவை வழிபாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பயணம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்,தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து திருப்பயணத்தில் பங்கேற்று, மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 14 திருச்சிலுவை தலங்களில் வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், 4 ஆவது நாளான வியாழக்கிழமை, மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலிகள் நடைபெற்றதுடன், சிலுவைப் பாதை வழிபாடுகளும், நற்கருணை வழிபாடுகளும் நடைபெற்றன. மலை உச்சியில், குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான மக்கள் பங்கேற்றனா்.