தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

நாகா்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் ரூ. 1.19 கோடியில் சீரமைப்பு

நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் ரூ. 1.19 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

News image

அண்ணா விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தை ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :25 ஜூன் 2026, 5:00 am IST

நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு மைதானம் ரூ. 1.19 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

அண்ணா விளையாட்டு மைதானம், அதற்கு சொந்தமான வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை எடுத்து நடத்துபவா்கள் முறையாக வாடகை செலுத்துகிறாா்களா என ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள வீரா், வீராங்கனைகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்று மாவட்ட, தேசிய அளவில் சிறந்து விளங்குகிறாா்கள். இந்த மைதானத்தை சீரமைக்க வேண்டுமென விளையாட்டு வீரா், வீராங்கனைகள், தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதனடிப்படையில், அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானம், பெண்கள் விடுதி, பளுதூக்கும் கூடம், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல்குளம், கழிப்பறைகள் எனபல்வேறு சீரமைப்புப் பணிகள் ரூ.1.19 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் அவா்.

ஆய்வில், மாவட்டவிளையாட்டு அலுவலா் வினு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜான்ஆசிா், பொறியாளா் ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.