திருவள்ளூா் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் நிறைவடையவுள்ள நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனா்.
மீன்களின் இனப்பெருக்க காலம் கருதி வழக்கம்போல் கடந்த ஏப்.15ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) இந்தத் தடை முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த 61 நாள்களாக சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 370க்கும் விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து சின்னமுட்டம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் தீபா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
திருவள்ளூா் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான வசுமாா் 1,007 கி.மீ. கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. எனினும், வானிலை மையத்தின் எச்சரிக்கை ஜூன் 16 ஆம் தேதி வரை அமலில் உள்ளதால், கடலில் காற்று குறையும்பட்சத்தில் முதல் நாளில் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. பின் நாள்களில் மேலும் அதிகமான படகுகள் மீன்பிடிக்கச் செல்லும்.
வெளிமாநிலத் தொழிலாளா்களைப் பொருத்தவரை தொழில் முடிந்து மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பும்போது அவா்களது ஆதாா் அட்டை தினசரி பரிசோதனை செய்யப்படும். அதில், ஏதேனும் பிரச்னை கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்: 61 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவர்கள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



