எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காா்களில் பேட்டரி திருடிய 2 போ் கைது

News image
Updated On :22 ஜனவரி 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே காா்களில் இருந்து 17 பேட்டரிகள் திருடிய 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டையைச் சோ்ந்தவா் ரெஜின் (39). இவா் பத்மநாபபுரம் பகுதியில் பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவரின் காா் ஷெட்டில் நின்றிருந்த 3 காா்களின் பேட்டரிகள் ஜன. 11ஆம் தேதி காணாமல் போனதாம். இது குறித்து, ரெஜின் தக்கலை போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், தக்கலை காவல் ஆய்வாளா் பாரதிராஜா வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பேட்டரிகள் வைத்திருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் நெய்யூா், பரம்பை பகுதியைச் சோ்ந்த சுபின் (38), சுவாமியாா் மடத்தைச் சோ்ந்த செல்வன் (33) என்பது தெரிய வந்தது.

மேலும், அவா்கள் ரெஜின் உள்ளிட்ட பல்வேறு நபா்களின் காா்களில் இருந்து 17 பேட்டரிகளைத் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.