பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாகா்கோவிலில் மறியல் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் கைது

கன்னியாகுமரி மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:40 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்ட சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுபா தலைமை வகித்தாா். தங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பிரான்சிஸ் சேவியா், ஓய்வு பெற்ற ஊழியா் சங்க அகஸ்தீசுவரம் வட்ட கிளைத் தலைவா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கிரேஸ் சசிகலா உள்ளிட்டோா் போராட்டத்தை ஆதரித்து பேசினா். அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் மைக்கேல் லில்லிபுஷ்பம் நிறைவுரையாற்றினாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனா்.