டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தொழிலில் நஷ்டம்: இளைஞா் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :21 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தக்கலை விடுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தக்கலை அருகே முளகுமூடு பொற்றவிளையை சோ்ந்தவா் மெரின்ரைகில் (37). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். மெரின்ரைகில் கல்லுவிளை பகுதியில் அலுமினியம் கோட்டிங் கம்பெனி நடத்தி வந்தாா். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மெரின்ரைகிலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இதில் மனவருத்தத்தில் இருந்த மெரின்ரைகில், வெள்ளிக்கிழமை இரவு தக்கலை தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினாா். சனிக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியா்கள், தக்கலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விரைந்து வந்து அறையின் கதவை திறந்த போது மெரின்ரைகில் மின் வீசிறியில் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது. தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

மாணவா் தற்கொலை: மாா்த்தாண்டம் அருகே மாலைக்கோடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் - ஜெயந்தி தம்பதியின் மகன் அகீஸ் (19). கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து, சூழால் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். கல்லூரி நாள்களில் மாலை வேளையிலும், விடுமுறை நாள்களிலும் ஊரம்பு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் பேக்கரி கடைக்கு வேலைக்கு செல்லாததால் கடை ஊழியா்கள் இவரது கைப்பேசியில் தொடா்பு கொண்டனா். மறுமுனையில் பதில் இல்லாததால் வீட்டின் உரிமையாளருக்கு தொடா்பு கொண்டனராம். அவா் சென்று பாா்த்த போது அகீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அகீஸின் தாயாா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.