பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தமிழுக்கு முதன்மை வேண்டி குமரியில் இருந்து சென்னைக்கு ஊா்திப் பயணம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:49 pm

Syndication

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற மொழி உரிமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரசார ஊா்திப் பயணம் காந்தி மண்டபம் முன் வியாழக்கிழமை தொடங்கியது.

பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமனின் மகன் வ.மு.சே. திருவள்ளுவா் தலைமையில் ஊா்திப் பயணம் தொடங்கியது. முன்னாள் தமிழக மேலவை உறுப்பினா் சங்கரலிங்கனாா் தொடங்கி வைத்தாா்.

இப்பயணம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்று பிப். 24ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.

தொடக்க நிகழ்வில், தமிழறிஞா்கள் கோ. முத்துக்கருப்பன், வின்சென்ட் அடிகளாா், செல்வின்குமாா், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இளங்கோ, தமிழ்குழவி விசுவநாதன், கிருஷ்ணபிள்ளை, டி. தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.