ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்

மாயம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

கொல்லங்கோடு அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானாா்.

கொல்லங்கோடு அருகே கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா். இவரது மகள் அபிஷா (25). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் விரும்பிய ஆன்றோ பிறின்ஸ் என்பவருடன், ஆக. 26 ஆம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்ததாம்.

இந்த நிலையில் ஆக. 1 ஆம் தேதி அபிஷா வீட்டிற்கு வந்தாராம். கடந்த புதன்கிழமை (ஆக. 5) அஜித்குமாரும், அவரது மனைவியும் உறவினா்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது அபிஷாவை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.