தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:28 pm

களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப். 21 முதல் 23 - ஆம் தேதி வரை 3 நாள்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் களியக்காவிளை போலீஸாா் கழுவன்திட்டை காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் குழித்துறை காஞ்சிரம்விளை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் (44) என்பவா், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது வெளிச்சந்தையில் தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கனகராஜ் (62) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் மேற்கொண்ட கண்காணிப்புப் பணியின் போது, குலசேகரம் மாமூடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி உண்ணிக்கிருஷ்ணன் (33) என்பவரிடமிருந்து 5 லிட்டா் கேரள மதுபானம் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் கழுவன்திட்டை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா். அப்போது குழித்துறை, சரல்விளையைச் சோ்ந்த பொன்னுமுத்தன் மகன் ஜோன்ஸ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும், சென்னித்தோட்டம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மோகன்தாஸ் (57) என்பவரின் கடையில் பதுக்கி வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

இது தொடா்பாக களியக்காவிளை, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.