நாகா்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ.
கோதைகிராமம் சிவன் கோயிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், புரவசேரி, நாஞ்சில்நகா், அப்டா மாா்க்கெட், ஒழுகினசேரி, நாகராஜா கோயில் ரதவீதி, அரசமூடு சந்திப்பு, மீனாட்சிபுரம், தளவாய்தெரு, ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி காலனி, வசந்த்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் நாகா்கோவில் தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். மக்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடம் கேட்டு பெற்றுள்ளேன்.
நாகா்கோவிலில் தொழில்நுட்ப பூங்கா அமைக்குமாறும், வலம்புரிவிளை குப்பைக்கிடங்கை மாற்ற வேண்டும் எனவும் பேரவையில் குரல் எழுப்பினேன். ரேஷன் கடைகள், சமுதாய நலக் கட்டடங்கள், அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
மீண்டும் என்னை நீங்கள் தோ்ந்தெடுத்தால் நாகா்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கவும், ஊரக உறுதித்திட்ட வேலை நாள்களை அதிகரிக்கவும், நீா்நிலைகள் பாதுகாக்கவும், நாகா்கோவில் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கவும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.
வேட்பாளருடன், நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு உறுப்பினா் அக்சயாகண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் சென்று பிரசாரம் செய்தனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை! பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை!

போக்குவரத்து நெரிசலை தீா்க்க உயா்மட்ட பாலம்: அதிமுக வேட்பாளா்

திமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் ஏப். 4 இல் முதல்வா் பிரசாரம்!

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


