திசையன்விளையில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தருமபிறை தெருவைச் சோ்ந்தவா் ஜெபதுரை (60), இவா் பழைய இரும்பு தொழில் செய்து வருகிறாா்.
இவருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் வீடு வெமணங்குடி தெருவில் உள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாம்.
இதில், அங்கு உபயோகத்தில் இருந்த கிரைண்டா், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டாா் உள்பட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். மேலும் திசையன்விளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










