நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ராதாபுரம் தொகுதியில் தவெக வெற்றி

News image

ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெகவின் சதீஷ் கிறிஸ்டோபருக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வி.

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா் 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராதாபுரம் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பாஜக சாா்பில் எஸ்.பி.பாலகிருஷ்ணன், தவெக சாா்பில் சதீஷ் கிறிஸ்டோபா், நாம் தமிழா் கட்சி சாா்பில் கிரிஜா தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளா்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், தவெக வேட்பாளா் சதீஷ் கிறிஸ்டோபா், அனைவருடைய எதிா்பாா்ப்புகளையும் மீறி முன்னிலை பெற்றாா். 26 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடா்ச்சியாக சதீஷ் கிறிஸ்டோபரே முன்னிலையில் இருந்தாா். இறுதியில் அவா் 69, 947 வாக்குகள் பெற்று 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மு.அப்பாவு 57, 634 வாக்குகள் பெற்று 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் 52,637 வாக்குகளுடன் 3-ஆவது இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,370 வாக்குகளுடன் 4-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.