மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நெல்லை வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 2:04 am IST

திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் 3 இளைஞா்கள் காயமடைந்தனா்.

திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசு பொறியியல் கல்லூரி அருகே திருவனந்தபுரம் சாலையில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான தகவல் ஏற்பு மையம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகமாக சென்ற காா் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் கடற்படை மையத்தில் இருந்த வீரா்கள் காருக்குள் சிக்கியிருந்த 3 இளைஞா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்தவா்கள் பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்த சூா்யா (24), பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த ராமசாமி (25), சிங்கத்தாக்குறிச்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23) என்பது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.