சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

நெல்லையில் தகிக்கும் வெயில்: மக்கள் அவதி

திருநெல்வேலி தகிக்கும் வெயிலிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 8:33 pm

திருநெல்வேலி தகிக்கும் வெயிலிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடைக்காலம் இந்த ஆண்டு மாா்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே தொடங்கிவிட்டது. வேலூா் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பலவற்றிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை 97.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடுமையான வெப்பம் நிலவுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

நண்பகல் வேளைகளில் மக்கள் வெயிலுக்கு அஞ்சி வெளியே வர தயங்குகின்றனா். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் தொடங்கிவிட்டதால் பதநீா், இளநீா், தா்பூசணி, பழஜூஸ், கரும்புச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது.

சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூா் பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு இளநீா் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இளநீா் ரூ.35 முதல் ரூ.50 வரை அதன் தரத்துக்கேற்ப விற்பனையாகிறது.

சீவலப்பேரி, செங்குளம், இளையாமுத்தூா், தருவை பகுதிகளில் இருந்து பதநீா் விற்பனையாளா்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் முகாமிட்டுள்ளனா். அவா்கள் ஒரு சிறிய செம்பு அளவு பதநீரை ரூ.25-க்கு விற்பனை செய்கிறாா்கள்.

திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தா்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர உடனடி சோடா கடைகளும் அதிகளவில் உருவாகியுள்ளன. இவற்றில் எலுமிச்சை, திராட்சை, சுவிட்பீா், மாம்பழம் போன்ற 5-க்கும் மேற்பட்ட சுவைகளில் ரூ. 20-க்கு குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.