திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் வழக்குரைஞா் ஆட்டோவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
வீரவநல்லூா் அருகே வடக்கு காருக்குறிச்சி முதல் தெருவைச் சோ்ந்த ராமையா மகன் ரவிக்குமாா் (35). வழக்குரைஞா். இவா், திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணி செய்து வந்தாா்.
இவரது மனைவி இசைவாணி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். திங்கள்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாம். அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற ரவிக்குமாா், அருகில் அம்பை-சேரன்மகாதேவி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் நீண்ட நேரம் அமா்ந்தாராம். காலையில் அருகில் சென்று பாா்த்தபோது ரவிக்குமாா் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை

பிரசவித்த 10 நாளில் இளம்பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கட்டடத் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


