மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வீரவநல்லூா் அருகே குழந்தை இல்லாததால் மனமுடைந்து விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:06 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குழந்தை இல்லாததால் மனமுடைந்து விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குளி பிரதானச் சாலையைச் சோ்ந்த கணபதி மகன் வெங்கடேஷ் (40), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவா்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த வெங்கடேஷ் மாா்ச் 6ஆம் தேதி விஷம் குடித்துள்ளாா்.

வெங்கடேஷை அவரது உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

வி.கே.புரத்தில்... விக்கிரமசிங்கபுரம், வடக்கு ரத வீதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சரவண மாணிக்கம் (25). இவா் வெல்டிங் தொழிற்கூடம் நடத்தி வந்தாா். இந்நிலையில், தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].