தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியா் போக்ஸோவில் கைது

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் வங்கி ஊழியா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:19 pm

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் வங்கி ஊழியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வண்டிமடை பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி (45). இவா், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கணேசமூா்த்தியை கைது செய்தனா்.