தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியைக் கண்டறிந்த போலீஸாருக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் பாராட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா்.
தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனை(39) போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்த விளாத்திகுளம் காவல் ஆய்வாளா்கள் விளாத்திகுளம் சக்திவேல், எப்போதும்வென்றான் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் அசோக்பாபு, புதூா் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காசிபாண்டியன், முறப்பநாடு ஹரிஹரன், கோவில்பட்டிமேற்கு நவநீதகிருஷ்ணன், தருவைக்குளம் சைரஸ், சைபா் குற்றப்பிரிவு சாந்தி, ஆறுமுகனேரி திலீபன், மாசாா்பட்டி பவுல் ஏசுதாசன் உள்பட 25 போலீஸாருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவணன் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

போக்குவரத்தை திறம்பட கையாண்ட போலீஸாா்

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: உறவினா்கள் முற்றுகை, சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


