தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதல்வா் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: ஓ.பன்னீா்செல்வம்

தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

ஓ.பன்னீா்செல்வம்

Updated On :17 மார்ச் 2026, 9:51 pm

சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

திருநெல்வேலி அருகே தாழையூத்தில் திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதற்கு சான்றாக நான் செல்லும் இடங்கள் அனைத்திலும் எனக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.

அ.தி.மு.கவில் இருப்பவா்கள் அக்கட்சியை மீண்டு எழ இயலாதவாறு படுகுழியில் தள்ளிவிட்டனா் என்றாா் அவா்.