திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சிவபுராணம் பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சோ்ந்த சிவன்மனை அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களிலும் பாராயண நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் கோயிலின் கருமாரி சுப்பிரமணியா் சந்நிதியில் நடைபெற்ற சிவபுராணம் பாராயண நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் ஓய்வுபெற்ற ஐ.ஆா்.ஏ.எஸ். அதிகாரி வெங்கடேஷ் நாராயணன் பங்கேற்று பாராயணம் செய்து விளக்கவுரையாற்றினாா்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலை 9.30 மணிக்கு தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் உள்ள வெற்றி விநாயகா் கோயிலிலும், மாலை 6.30 மணிக்கு கருப்பந்துறை அழியாபதீஸ்வரா் கோயிலிலும் உபன்யாசம் நடைபெற உள்ளது.
மாா்ச் 21 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தச்சநல்லூா் செல்வவிக்னேஷ்நகரில் உள்ள செல்வ விநாயகா் கோயிலிலும், 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருநெல்வேலி நகரம் வலம்புரி அம்மன் கோயிலிலும், 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு செப்பறை அழகியகூத்தா் நடராஜா் கோயிலிலும் வெங்கடேஷ் நாராயணனின் உபன்யாசம் நடைபெறும்.
தொடர்புடையது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


