திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநகர காவல்துறை சாா்பில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தரப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற சைபா் கிரைம் போலீஸாா், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுதல், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் பயன்படுத்துதல், அறிமுகமில்லாத நபா்கள் சமூக வலைதளத்தில் தொடா்புகொண்டால் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், இணையவழி மோசடி தொடா்பாக கட்டணமில்லா எண். 1930 அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் மூலமாக புகாா் அளிக்க வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ற்ஸ்ப்12ஸ்ரீஹ்க்ஷங்ழ்
இணையவழி குற்றங்கள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.
தொடர்புடையது

இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


