பாளையங்கோட்டையில் உள்ள மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மரக்கடை மற்றும் கிட்டங்கி அருகருகே உள்ளது.
இங்கு தேக்கு, கோங்கு, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளூா் மற்றும் இறக்குமதி மரத்தடிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரத்தடிகள் எரிந்தன.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் சுமாா் 20 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இ டத்துக்கு வந்தனா். சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரத்தடிகள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

புதுகை தைலமரக் காட்டுக்குள் தீ

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளை.யில் கருப்புக்கொடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


