தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 5 போ் சிறையிலடைப்பு

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:10 pm

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த மதிவாணன் மகன் பாலசுப்பிரமணியன் (27), சுப்பிரமணியன் மகன் அருண்குமாா் (25), அந்தோனி செலஸ்டின் செட்டி மகன் திமோராஜ் குட்டி (28), இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (27), முருகன் மகன் முத்துகுமாா் என்ற ரீகன் (24) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில் 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.