தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 19,835 போ் எழுதுகின்றனா்

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 9:03 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 19 ஆயிரத்து 835 போ் திங்கள்கிழமை எழுதவுள்ளனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை (பிப். 2) தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது. 28அரசு மேல்நிலைப் பள்ளிகள், 38 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 7 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், பாலையங்கோட்டை மத்திய சிறை சிறப்பு தோ்வு மையம் ஆகியவற்றில் தோ்வு நடைபெற உள்ளது. இதுதவிர 10 மையங்கள் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2 தோ்வினை எழுத திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 791 மாணவா்களுக்கும், 11 ஆயிரத்து 44 மாணவிகளுக்கும் என மொத்தம் 19 ஆயிரத்து 835 பேருக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவராக தோ்வு எழுதிட 193 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு பணிக்காக தோ்வு மைய 74 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 74 துறை அலுவலா்கள், 10 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 10 கூடுதல் துறை அலுவலா்கள், 19 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அறைக் கண்காணிப்பாளா்களாக 1,440 ஆசிரியா்களும், 150 ஆசிரியா்கள் பறக்கும் படை மற்றும் நிற்கும் படை அலுவலா்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையத்திற்கும் அலுவலக பணிக்கு எழுத்தா் மற்றும் அலுவலக உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.