டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :26 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பழனி முருகன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்திப்பு மதுரை சாலை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், சிந்துபூந்துறையைச் சோ்ந்த செல்வம் மகன் முகேஷ்(21) என்பதும், விற்பனைக்காக 50 கிராம் அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.