விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 9:58 pm

திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் மகன் சுகுமாா்(28). பாளையங்கோட்டை பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைதான இவா், பிணையில் வெளிவந்தாா்.
இதனையடுத்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்த இவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சுகுமாரை பாளையங்கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...