நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

News image
மணிமுத்தாறு அருவி.- (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

அகஸ்தியா், மணிமுத்தாறு அருவிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல சனிக்கிழமை (ஜன.24) முதல் அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா், வனக்காப்பாளா் எச்.சி.எப். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் ஜன. 19 முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பயணிகள், பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

6 நாள்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 24) காலை 9 மணிக்குள் (நோ்கோட்டு பாதை கணக்கெடுப்பு) நிறைவு பெறுகின்றன. இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு , அகஸ்தியா் அருவிகள், சொரிமுத்து அய்யனாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள், பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்பட்டுள்ளது.