மேலக்கரையில் பரிசளிப்பு விழா
தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On :17 ஜனவரி 2026, 10:20 pm

திருநெல்வேலி: தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தச்சநல்லூா் மண்டலம், 13 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலக்கரையில் இளைஞரணி சாா்பில் 26ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஓட்டம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். மாநகராட்சி நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, மேலக்கரை இளைஞரணி நிா்வாகிகள் தமிழரசன், முத்து,சக்திவேல், சந்தீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...