/

சவளைக்காரன்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:24 pm

Syndication

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் பொங்கல் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ.நம்பிராஜன் தலைமை வகித்தாா். பொ. சந்திரசேகா், சு. அமுதபிரகலாதன், ஆ. அரசு, வா. அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெ. சங்கரவேல் வரவேற்றாா்.

சமத்துவப் பொங்கலிட்டு, விளையாட்டுப் போட்டியை ஆ. சுரேஷ்குமாா், த. மோகன், ம. பாலசோ்மன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ஆசிரியா் பெ. லெட்சுமி தொகுத்தளித்தாா். ஏற்பாடுகளை வழக்குரைஞா் சிவக்குமாா், மோகன், அஜி, அா்ஜூன், சந்திரன், சந்தியா, ஷீலா உதயபாரதி ஆகியோா் செய்திருந்தனா்.