/

பேட்டையில் 182 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அளிப்பு

பேட்டையில் 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:47 pm

Syndication

திருநெல்வேலி: பேட்டையில் 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி பேட்டை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை சாந்தி வரவேற்றாா். திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, 182 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். மாமன்ற உறுப்பினா்கள் மன்சூா், மாரியப்பன், சுப்பிரமணியன், அல்லா பிச்சை, ராஜேஸ்வரி, காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.