2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சாா்பில் திருநெல்வேலி மண்டலத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினா் கோரிக்கை மனுக்களை பெற்றனா். இக்குழுவில் முன்னாள் அமைச்சா்கள் செம்மலை, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமாா், சி.வி. சண்முகம், வைகைச் செல்வன், ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.