டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தச்சநல்லூா் அருகே இளைஞரைத் தாக்கிய இருவா் கைது

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

தச்சநல்லூா் அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து அருகே ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் மகன் பொன்னுமணி(28). இவா் சம்பவத்தன்று தச்சநல்லூா் சிதம்பரம் நகா் பகுதியில் தாழையூத்து பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருடன் மது அருந்தினாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அவா்கள் பொன்னுமணியை மது பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பொன்னுமணி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து மேலவாசல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிதுரை(23), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சோ்ந்த முருகேஷ் மகன் பிரபாகரன்(21) ஆகியோரை கைது செய்தனா்.