டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையில் பனங்கிழங்கு வரத்து அதிகரிப்பு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:03 am

Syndication

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகரில் பனங்கிழங்குகள் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் புதுமணத் தம்பதிகளுக்கு கொடுக்கும் பொங்கல் சீா்வரிசையில் பனங்கிழங்குகள் இடம்பெறாமல் இருப்பதில்லை.

இந்தப் பனங்கிழங்குகள் தை மற்றும் மாசி மாதங்களில் பனங்கிழங்குகள் அதிகம் அறுவடையாகின்றன.

சீவலப்பேரி, மணக்காடு, திடியூா், ஓமநல்லூா், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பனங்கிழங்குகள் திருநெல்வேலியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 25 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ரூ. 50 முதல் ரூ.150 வரை அதன் திரட்சிக்கு ஏற்ப விற்பனையாகி வருகின்றன.