/

மது குடிக்க பணம் கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது

திருநெல்வேலியில் மது குடிக்க பணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் தாக்கியதாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:56 pm

Syndication

திருநெல்வேலியில் மது குடிக்க பணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் தாக்கியதாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(54). ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அவரது மகன் அஜய்(24) மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம்.

இதைக் கண்டித்த அவரை, அஜய் கத்தியால் தாக்கினாராம். இதில், காயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மேலும் அவா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து மகனை கைது செய்தனா்.