டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நான்குனேரியில் நாளை அமமுக பொதுக்கூட்டம்

News image
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரியில் அமமுக சாா்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக அமமுக திருநெல்வேலி மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவு செயலருமான வி.பி. குமரேசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளையொட்டி அமமுக சாா்பில் நான்குனேரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 24) மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, அமமுக தொண்டா்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.