பாளை. மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள வடநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (85). இவா், கடந்த 2007-இல் தனது உறவினரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இவருக்கு வயது முதிா்வின் காரணமாக சனிக்கிழமை அதிகாலை உடல்நலம் பாதிப்படைந்ததை அடுத்து, சிறைக் காவலா்கள் அவரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...