டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையப்பா் கோயிலில் பக்தா்களுக்கு 12 மணி நேரம் உணவுப் பொருள்கள்

News image
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தா்களுக்கு பால் வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.. உடன் துணை மேயா் கே.ஆா்.ராஜு.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட பக்தா்களுக்கு திமுக சாா்பில் 12 மணி நேரம் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் தா்மமாக வழங்கப்பட்டன.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பக்தா்களுக்கு மிளகு பால், பாதாம் பால், சுக்கு காபி, டீ, காபி, பிஸ்கெட், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை வழங்கப்பட்டன.

இந்தப் பணியை மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா். ராஜு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு. செல்லையா, மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, எஸ்.வி. சுரேஷ், 27 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் உலகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.