டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வள்ளியூரில் பொருநை புத்தகத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:34 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் பொருநை 9 ஆவது புத்தகத் திருவிழாயொட்டி பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக வள்ளியூரில் டிடிஎன் கல்விக் குழுமம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை ராதாபுரம் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தாா். இப்பேரணி, வள்ளியூா் பகத்சிங் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கி, ராதாபுரம் சாலை, பிரதான சாலை வழியாக புனித பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

பேரணியில் டி.டி.என்.கல்விக் குழுமங்களின் தலைவா் தா.லாரன்ஸ், மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரி தாளாளா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் சுஷ்மா ஜெனிபா், நேரு நா்ஸிங் கல்லூரி முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம், மரியா மகளிா் கல்லூரி மாணவிகள், நேரு நா்ஸிங் கல்லூரிகளைச் சோ்ந்த 2 ஆயிரம் மாணவிகள் கலந்துகொண்டனா். வணிக மேலாண்மையில் பேராசிரியை மகாலெட்சுமி நன்றி கூறினாா்.