அம்பை ரயில் நிலையத்தில் கரடி நடமாட்டம்? வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்பை ரயில் நிலையப் பகுதியில் கரடி நடமாடுவதாக பகிரப்பட்ட புகைப்படம்.
அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து, அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் கரடி உலாவுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, இரவு நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்லுமாறு அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வேண்டுகோள் விடுத்தனா்.
மேலும், தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகளிடம், இப்பகுதியை ஆய்வு செய்து, கரடி நடமாட்டம் இருக்கும் பட்சத்தில், அவற்றை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினா். வனச்சரகா் கவின், கரடியைப் பிடிக்கக் கூண்டு வைப்பது, அந்தப் பகுதியில் வனத்துறையினா் ரோந்துப் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






