ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அம்பை அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட சுமாா் 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட சுமாா் 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், அம்பாசமுத்திரம் அருகே அடைச்சாணி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரில் 23 மூட்டைகளாக கடத்திவரப்பட்ட 1,035 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், காருடன் அதை கடத்தி வந்த அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகனான ஓட்டுநா் சுப்பிரமணியன் (40), சிறுக்கன்குறிச்சி, வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த சங்கரகுமாா்(44) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.